kathal sokam

Friday, January 7, 2011

நினைத்து உருகிய நிமிடங்கள்...................

எல்லாவற்றையும் விட
மேலோங்கியே இருக்கிறது
உன் ஸ்பரிசம்….
கொஞ்சம் தீண்டலும்
கொஞ்சம் சீண்டலும்
மெல்ல மெல்ல கொன்று தீர்க்கும்…
இனியும் இனியும்
இன்னும் இன்னும்
என்றபடியே வெட்கங்களை தகர்த்தெறிந்து
மெல்ல புதையும் அந்த நேரங்கள்….

நகக்குறியா, பற்குறியா என்ற
விவாதங்களிலேயே
கழியும் பொழுதுகள்.
சிற்சில சந்தர்ப்பங்களில்
ஆளுமை அடிமையாகவும்
அடிமை ஆளுமையாகவும் ஆக்கப்படும்.
வெப்பக்கடத்தி என்று
ஆடைகளை புறந்தள்ளி
இதயக்கடத்தியாய் செயல்படுவாய்.

எல்லாமே நானே செய்தும்
எல்லாமுமே நீயாய் இருக்கும்
அதிசயம் மட்டும் புரிவதே இல்லை...
என் செய்கையின்
ஒவ்வொரு வினையும்
உன்னை நோக்கியே இருக்கிறதே..
இதுதான் எனக்கு நீ செய்த செய்வினையோ??

தேடல்களும், தவிப்புகளும்
இன்னும் மிச்சமிருக்கின்றன.
வெளிச்சத்தில் தேடுவோர் மத்தியில்
இருளிளேயே தேடிக்கொண்டிருக்கிறேன்.
இந்த தேடலுக்கு
இருள்தான் சரியான துணை.
இன்னும் இன்னும்...
கிடைக்கவில்லை..
கிடைக்க செய்துவிடாதே..
இன்னும் கொஞ்சம் தேடலாமே....
   
   **   RAENUSHAN **

No comments:

Post a Comment